Tuesday, April 28, 2009

புதிய கதைகள்

பாட்டி வடை சுட்ட கதை என்னடா அதே பழைய கதையானு தானே நினைகிரிங்க. என்னோட முடிவையும் கொஞ்சம் படியுன்களே.
ஒருஊருல பாட்டி மரத்தடியில உக்காந்து வடை சுட்டுட்டு . அந்த மரத்தின் மேலே ஒரு காக்க உக்காந்து இருந்திச்சு. அதை பார்த்த பாட்டி காக்காவுக்கு ஒரு வடை குடுத்தாங்க. அதை வாங்கின காக்கா சந்தோசத்தில பறந்து வேற இடத்துக்கு போச்சாம். அங்கு ஒரு நரி வந்திச்சு அந்த நரிக்கு காக்கா வடை மேல ஒரு கண்ணு உடனே அது காக்க நீ ரொம்ப அழகாக இரக்க உன்னோட குரலும் அழகாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் ஒரு பாட்டு பாடு என்றது. நரியின் வடை ஆசையை புரிந்துகொண்ட காகம் உனக்கு வடை வேண்டுமா இல்லேன்னா என் பாட்டு வேணுமா என்று கேட்டுக்கொண்டே தான் கையில் இறந்த வடையை பங்கிட்டு நரிக்கு கொடுத்தது . இருவரும் வடையை சாப்பிட்டுவிட்டு இன்பமாக சென்றனர் .
என்னங்க என்னோட கதை எப்படி இருக்கிறுது . எதற்காக நாம சண்டை போட்டுக்கணும். இந்த கதை மாதிரியே எல்லோரும் எல்லாருக்காகவும் வாழ்வோம். வளர்க மனித நேயம் .வாழ்க பாரதம்.

1 comment:

  1. Very nice story. we are expecting this type of only. excellent.

    ReplyDelete